Monday, March 22, 2010

துபாயில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாடு

துபாயில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாடு



மார்ச் 18, 19 மற்றும் 20-ம் தேதிகளில் சர்வதேச அமைதி மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமிய அறிஞர்கள் வருகைப் புரிந்து இஸ்லாமிய கொள்கையைப் பற்றியும், அதன் சிறப்புகளைக் குறித்தும் சொற்பொழிவாற்றினர்.


சர்வதேச மார்க்க அறிஞர்கள் மஸ்ஜித் ஹரமின் இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸ், குவைத்திலிருந்து ஷேக் மிஷரி ராஸித் அல் எஃப்ஸி, எகிப்திலிருந்து டாக்டர் ஹூசைன் ஹமத் ஹசன், அமெரிக்காவிலிருந்து யூசுப் எஸ்டஸ், யாசிர் காதி, இங்கிலாந்திலிருந்து அப்துல் ரஹீம் கிரீன், மலேசியாவிலிருந்து ஷேக் ஹூசைன் யீ, இந்தியாவிலிருந்து டாக்டர். ஜாகிர் நாயக், எம்.எம்.அக்பர், அஹ்மத் ஹமத், மாயன் குட்டி மாதர், தென் ஆப்ரிக்காவிலிருந்து ஜெய்ன் பிகா, கனடாவிலிருந்து சையத் ராகே ஆகிய அறிஞர்கள் கலந்துக் கொண்டு சொற்பொழிவாற்றினர்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிமல்லாதவர்கள் பலரும் மார்க்கத்தை விளங்கி இஸ்லாமிய கொள்கையை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

அமீரகத்திலுள்ள பல்வேறு இஸ்லாமிய வங்கிகளும், வர்த்தக நிறுவனங்களும் தங்களின் நிறுவனங்களின் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கடைகளை அமைத்திருந்தன. தமிழகத்திலிருந்து அல்-ஃபஜர், இண்டர்நேஷனல் இஸ்லாமிக் ஸ்கூல் ஆகிய சர்வதேச பள்ளிகளின் விளம்பரங்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


நிகழ்ச்சி தொடர்பான விபரங்கள் அவ்வப்போது WWW.PEACHCONVENTION.COM என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டன





- ஹூசைன் பாஷா

Tuesday, March 16, 2010

அபுதாபியில் நேர மேலாண்மை பயிற்சி

அபுதாபி: அபுதாபியில் உள்ள கேரளா சோசியல் சென்டரில் நேர மேலாண்மை பயிற்சி முகாம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது.

நெல்லை ஏர்வாடி நண்பர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சி முகாமை சாதிக் அவர்கள் திருக்குர்ஆன் ஓதி துவக்கி வைத்தார்.

துபாய் மண்டல பொறுப்பாளர் உவைஸ் பயிற்சியாளரைப் பற்றி அறிமுக உரையாற்றி, இது போன்ற நிகழ்ச்சிகளின் அவசியம் குறித்து விளக்கினார்.

மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் ஹுசைன் பாஷா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்கு நேரமேலாண்மை குறித்து பயிற்சியளித்தார்.

ஒலி ஒளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சி முகாமில் மிக எளிமையான முறையில் அனைவருக்கும் புரியும்படியான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.

இறுதியாக நன்றி கூறிய அபுதாபி பகுதியின் பொறுப்பாளர் அப்துல்லாஹ், இது போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடந்து நடத்தப்படும் என்றும் கூறினார்.

சிற்றுண்டி, தேநீருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டை ஈமான் (EMAN) நண்பர்கள் செய்திருந்தனர்.