Wednesday, November 30, 2011

அல்அய்னில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்அய்ன் மண்டல தமுமுக சார்பில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 25.11.2011 அன்று கத்தாரா கிளிண்கோ கேம்ப் பள்ளிவாசலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமீரக தமுமுக துணைச் செயலாளர் டாக்டர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். கத்தாரா கிளை தமுமுக தலைவர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி திருக்குர்ஆன் ஓதினார். 

ஷார்ஜாவிலிருந்து வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலி கான் ‘அர்ஷின் நிழலில்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மார்க்கம் தொடர்பான சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை ஆர்வமூட்டும் வகையில் அல்அய்ன் ஜிம்மி மருத்துவமனையில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் டாக்டர் பீர்முஹம்மது  ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார். பின்னர் இரத்த தானம் செய்வது தொடர்பான சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இறுதியாக அல்அய்ன் மண்டல தமுமுக துணைச் செயலாளர் வடகால் எஸ்.புர்ஹானுதீன் நன்றியுரை ஆற்றினார்.

மகாம், ஜிமி, செனையா, மசியாத் மற்றும் கத்தாரா உள்ளிட்ட அல்அய்ன் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சகோதரர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

Sunday, November 27, 2011

த.மு.மு.க செயற்குழு - இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.சலிமுல்லாகான் தலைமையில் மஸ்ஜித் தக்வா பள்ளியில் நடைபெற்றது.