Monday, August 29, 2011
Monday, August 22, 2011
Tuesday, August 16, 2011
சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி
சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மண்டலம் தமுமுக சார்பாக கடந்த 13-08-2011 சனிக் கிழமை அன்று கேரளா ஷோசியல் சென்டரில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.சனையா கிளைத்தலைவர் வாலிநோக்கம் பீர் முகம்மது திருமறைக் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அபுதாபி மண்டல நிர்வாகி அபுல் ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார்
அபுதாபி மண்டலம் தமுமுக செயலாளர் கீழை இர்பான் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக தமுமுக நிர்வாகிகள் மற்றும் அபுதாபி தாயிகள் மவ்லவி.ஹிதாயதுல்லாஹ் நூரி, மவ்லவி. இக்பால் உமரி, அமீர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐக்கிய அரபு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி வணக்கங்களை அதிகரிப்போம் என்ற தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்.
தாயகத்திலிருந்து வந்திருந்த தமுமுக தலைமைக்கழகப் பேச்சாளர் கோவை ஜெய்னுல் ஆப்தீன் நபி வழியே நம் வழி என்ற தலைப்பிலும் தமுமுக மாநில உலமா அணிச் செயலாளர் மவ்லவி.யூசுப் எஸ்.பி. இயக்கமாய் செயல்படுவோம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். தாயகத்தில் நடக்கும் தமுமுகவின் செயல்பாடுகளை பற்றி அபுதாபி மண்டலம் தமுமுக தலைவர் பொதக்குடி.தாஜுதீன் விளக்கவுரை நிகழ்த்தினார். சனையா கிளைச் செயலாளர் மண்டபம் அப்துல் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் சிறப்புகள்
• வேலை நாளில் நடத்தப் பட்டது.
• அனைத்து சகோதர அமைப்புகளுக்கும் அழைப்புவிடபட்டது
• வெப்பத்தையும் பொருட்;படுத்தாமல் தமுமுக நிகழ்ச்சிக்காக மக்கள் திரண்டனர்
• பிரதான சாலையிலிருந்து அரங்கம் வரை நமது சீருடையில் வரவேற்பு குழவினர்
• தமுமுக வின் கலங்கரை விளக்கம் புகைப்பட கண்காட்சிகள்
• அரங்க முழுவதும் கண்கவர் தமுமுகவின் பேனர்கள்
• நோன்பு துறப்புக்காக மிகசிறப்பான உயர்தர உணவு ஏற்பாடுகள்
தொழில் அதிபர்கள், அனைத்து சகோதர அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் மக்களும் 300க்கு அதிகமானோர் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரசுல், முகவை இஸ்மாயில், இம்ரான், உஸ்மான், நாசர், மவ்லவி இஸ்மாயில்ஷா, சுஜாவுதீன், மொய்தீன், சலீம், சாதிக், ஹாஜா, சர்ஃபுதீன், முஸ்தாக், சரவணன் மற்றும் ஸ்டிஃபன் ஆகிய குழுவினர் 10 தினங்களாக கடுமையாக பணி செய்து மக்களை அழைத்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் குறை நிறைகள் கேட்டறியப்பட்டன எழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி துவா ஓதி நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
Sunday, August 14, 2011
Subscribe to:
Posts (Atom)