Saturday, March 12, 2011

அபுதாபி மண்டல இரத்த தானம் முகாம்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உலக முழுக்க இரத்த தானம் செய்யும் தமிழ் அமைப்புகளில் முன்னோடியாக திகழ்கிறது எல்லாப்புகழும் இறைவனுக்கே (அல்ஹம்துலில்லாஹ்), அதன் தொடர்ச்சியாக 11.03.2011 அன்று வளைகுடா நாடான அமீரகத்தில் அபுதாபி மண்டல த.மு.மு.க சார்பாக சனயா 17 பகுதி E.T.A Melco கேம்ப் முன்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இரத்த தானமுகாமில் இந்தியா மற்றும் அண்டை நாடு சகோதர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். முகாம் குறுகிய நேரத்தில் நடைபெற்றது. சுமார் 70 மேற்பட்ட சகோதர்கள் இரத்த தானம் செய்தனர். எல்லா புகழும் இறைவனுக்கே (அல்ஹம்துலில்லாஹ்)!

நிகழ்ச்சி ஏற்பாட்டை சனயா த.மு.மு.க பகுதி நிர்வாகிகள் மேலப்பாளையம் இம்ரான், மண்டபம் அப்துல் ரஹ்மான், உடன்குடி முபாரக், கீழை பசீர், பாதுஷா, ரசாக், ஜாகிர் மற்றும் சாகுல் ஹமீது சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பாராட்டு சான்றிதழ்

சென்னைக்கு முந்திய வரலாற்றில் தமிழக மக்களுக்கு கல்வியையும் நாகரிகத்தையும் கற்று தந்து மதரஸா (பள்ளிகூடங்கள்) நகரமாக திகழ்ந்த மதராஸில் (சென்னையில்)வடமரைக்காயர் என்ற கடற்கரை பகுதியில் மனித நேயத்தின் கலங்கரை விளக்காக சுடர் விட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் ஒரு ஒளியாக செயல்பட்டு வரும் அபுதாபி மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு அபுதாபி ஷேக் கலிபா மெடிக்கல் சென்டர் இரத்த தான முகாம் நடத்தியதற்காக பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே.... (அல்ஹம்துலில்லாஹ்)

கடந்த ஆண்டுகளிலும் இது போன்ற சான்றிதழ்களை அபுதாபி மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் கடந்தாலும் மனித நேயப்பணிகளை முழுமையாக செய்து வாழும் பண்பு உள்ளவர்கள் த.மு.மு.க வினர் என்பதை இது போன்ற பல பாராட்டுகள் எடுத்துக்காட்டுகிறது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே ....(அல்ஹம்துலில்லாஹ்)


செய்தி தொகுப்பு: கீழை இர்பான்.