Thursday, November 29, 2012

அபுதாபி மண்டல த.மு.மு.க வின் நிர்வாக மறு சீரமைப்பு

அபுதாபி மண்டலத்தில் நிர்வாக மறு சீரமைப்பு வெள்ளிக்கிழமை(23.11.2012) அன்று மாலை 8.00 மணி அளவில் அமீரகத்தின் துணை தலைவர் ஹுசைன் பாஷா தலைமையில் தலைவராக பொதக்குடி தாஜுதீன், துணை தலைவராக அபுல் ஹசன், செயலாளராக திருச்சி சபியுல்லாஹ், துணை செயலாளராக ராமநாதபுரம் இஸ்மாயில் மற்றும் அடியக்கமங்கலம் ஷேக் தாவூத், பொருளாளராக கீழை சாதிக் பாஷா, மக்கள் தொடர்பாளராக இஸ்மாயில்ஷா, மார்க்க சொற்பொழிவாளராக திருச்சி அப்துல் ரஹ்மான், அபூதர் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும் செயலாளராக பணியாற்றி வந்த கீழை அஹமது நிரந்தரமாக தாயகம் செல்வதால் அவர்களுக்கு பிரிவு உபசார விழா இனிதே நடைப்பெற்றது நிகழ்ச்சிகளில் அபுதாபியின் அனைத்து பகுதி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Sunday, August 5, 2012

த.மு.மு.க அபுதாபி நகர கிளை சார்பாக தர்பியா நிகழ்ச்சி

கடந்த 03 - 08 - 2012 அன்று வெள்ளி கிழமை சரியாக ஜும்மாவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.  துணை செயலாளர் கீழை அஹ்மத் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். சிதம்பரம் சுஜஜாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் கீழை இர்பான் அவர்கள் தர்பியாவின் நோக்கம் என்ற தலைப்பில் துவக்க உரை நிகழ்த்தினார். 

அடுத்து திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள  த.மு.மு.க மாநில செயலாளர் தருமபுரி சாதிக் பாஷா அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிர்வாகிகள் கருத்துரைக்கையில் இது போன்ற நிகழ்ச்சி மாதம் ஒரு முறை அவசியம் என்று கூறினார்கள். அபுதாபி நேஷனல் எளிவேட்டர் நிறுவனம் சார்பாக மிகவும் சிறப்பாக இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Saturday, August 4, 2012

சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி

சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மண்டலம் தமுமுக சார்பாக கடந்த 02-08-2012 வியாழக் கிழமை அன்று கேரளா ஷோசியல் சென்டரில் நடைபெற்றது. இருமேனி ஆலிம் இஸ்மாயில் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அபுதாபி மண்டல துணைத்தலைவர் அபுல் ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அபுதாபி மண்டலம் தமுமுக செயலாளர் கீழை இர்பான் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி அமீரக பொதுச்செயலாளர் கட்டிமேடு நூருல்லாஹ் அபுதாபி மண்டல தமுமுக பொருளாளர் கீழை சாதிக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


திருச்சி அப்துல் ரஹ்மான் இறையச்சத்தை அதிகரிப்போம் என்ற தலைப்பிலும் ஏ.எஸ்.இப்ராஹிம் பித்ராவின் அவசியம் என்ற தலைப்பிலும், ஐக்கிய அரபு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.


தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தமுமுக மாநில செயலாளர் தர்மபுரி சாதிக் அவர்கள் நேர்வழி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அபுதாபி மண்டல தமுமுக துணை செயலாளர் முகவை இஸ்மாயில் அவர்கள் நன்றி உரை நிகழ்த்த, இறுதியாக துஆ ஓதி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்புகள்

•   வேலை நாளில் நடத்தப் பட்டது.
வெப்பத்தையும் பொருட்;படுத்தாமல் தமுமுக நிகழ்ச்சிக்காக மக்கள்    திரண்டனர்
பிரதான சாலையிலிருந்து அரங்கம் வரை வரவேற்பு குழவினர்
நோன்பு துறப்புக்காக மிகசிறப்பான உயர்தர உணவு ஏற்பாடுகள்

தொழில் அதிபர்கள், அனைத்து சகோதர அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் மக்களும் 300 க்கும் அதிகமானோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை உஸ்மான்மவ்லவி இஸ்மாயில்ஷா, மொய்தீன்,  சாதிக், அஹ்மத் மற்றும் ஸ்டிஃபன் ஆகிய குழுவினர் 10 தினங்களாக கடுமையாக பணி செய்து மக்களை அழைத்தனர்.

 அல்ஹம்துலில்லாஹ்!

Monday, July 23, 2012

15 வது ஆண்டு ரமலான் (இப்தார்) சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

த.மு.மு.க   அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012 (வியாழக்கிழமை), அன்று மாலை 4.30 மணிக்கு 15 வது ஆண்டு ரமலான் (இப்தார்) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

-  த.மு.மு.க அபுதாபி மண்டலம்

Tuesday, July 10, 2012

அபுதாபி மண்டல த.மு.மு.க புதிய நிர்வாகம்

06.07.2012, வெள்ளிகிழமை அன்று அபுதாபி மண்டல தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. பீர் முஹம்மது அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார். த.மு.மு.க அபுதாபி சிட்டி து.தலைவர் ஆலிம். இஸ்மாயில் ஷா மற்றும் த.மு.மு.க அமீரக செயலாளர் சகோ.யாசின் நூருல்லாஹ் ஆகியோர் மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி உரையாற்றினார்கள் நிகழ்ச்சியின் இறுதியில் அபுதாபி மண்டல த.மு.மு.க  புதிய நிர்வாகம் த.மு.மு.க அமீரக செயலாளர் சகோ. யாசின் நூருல்லாஹ் அவர்கள் தலைமையில் தேர்ந்து எடுக்கப் பட்டது.

தலைவர் : பொதக்குடி. தாஜுதீன்

செயலாளர் : பொறியாளர். இர்பான்

பொருளாளர் : கீழை.சாதிக் (ETA)

துணைத்தலைவர் : பொறியாளர். அபுல் ஹசன்

துணைச்செயலாளர்கள்:

1. முகவை. எஸ். இஸ்மாயில்
2. கீழை. அஹமது அப்துல் காதர்
3. குடவாசல். நாசர்

மக்கள் உரிமை பொறுப்பாளர் : சபியுல்லாஹ்

செயற்குழு உறுப்பினர்கள்:

காயல் பட்டிணம்.  லெப்பை தம்பி,
பொறியாளர். ஹாலித்
கீழை. ஷாகுல் ஹமீது
அஹமது ஜிப்ரி
கீழை. ரிபாய்

Wednesday, June 13, 2012

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான தஃவா நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15.06.2012 வெள்ளி மாலை 6 மணியளவில் - இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான தஃவா நிகழ்ச்சி @ இஸ்லாமிக் அஃபயர்ஸ் அரங்கம் - மம்ஜார் துபாய்
 

Sunday, May 20, 2012

தமுமுகவின் அமீரக செயற்குழு

தமுமுகவின் அமீரக செயற்குழு


மண்டல நிர்வாகிகள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு தங்களது மண்டல செயற்பாடுகளை விளக்கினர். அதோடு எதிர்கால செயல்பாடுகளின் திட்டமிடல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
அமீரக தலைவர் அதிரை.அப்துல் ஹாதி அவர்களும், அமீரக செயலாளர் யாசின் நூருல்லாஹ் அவரகளும் அமீரகத்தில் தமுமுக கடந்துவந்த பாதைகளையும், பலவேறு சகோதர்களின் தியாகத்தையும் சுட்டிக்காட்டியதோடு, மிகப்பெரிய இடையூறுகளுக்கு மத்தியிலும், பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் அமீரகத்தில் இயக்கம் கட்டமைக்கப்பட்ட வரலாறையும் எடுத்துரைத்தார்கள்.

இரவு முதல் ஃபஜ்ரு வரை நடைபெற்ற செயற்குழுவில் அமீரகத்தின் செயற்பாடுகள் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து மாபெரும் நீண்ட விவாதம் நடைபெற்றது. நெடிய விவாதத்தின் இறுதியில் அமீரக செயற்குழு உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தில் தற்பொழுது இயங்கிகொண்டிருக்கும் அதே நிர்வாகம் மீண்டும் நீடிப்பது என்றும் அமீரக நிர்வாகத்தை விரிவுபடுத்தி அனைத்து மண்டலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது என்றும் அந்த பொறுப்பாளர்கள் அனைத்து மண்டலங்களின் செயற்பாடுகளை கவணிப்பதோடு அமீரக செயற்குழு உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தில் அமீரக பணிகளையும் கவனிப்பது என்றும் இவர்கள் அமீரக நிர்வகத்திற்கு தயாராகும் பட்சத்தில் அவர்களை அமீரக நிர்வாகத்திற்கு ஏற்றம் கொடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

ரமலான் மாதம் நெருங்குவதால் அமீரத்திற்கு தாயகத்தில் இருந்து ஒரு தாயியை அழைத்து மார்க்க பயான்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சில முக்கிய முடிவுகளுக்குப்பின் துவாவுடன் செயற்குழு முடிவுற்றது. வருகைதந்த அனைவரும் தங்களது பணிகளை பகிர்ந்துகொண்ட மன நிறைவோடும், எதிர்கால பணிகளின் கணவுகளோடும் சொந்த சகோதரர்களை சந்தித்த சந்தோசத்தோடு கலைந்துசென்றனர்

Tuesday, February 21, 2012


தமுமுக, ஜாக், இதஜ மற்றும் இயக்கம் சாரா தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமீரக வரலாற்றில் முதன்முறையாக தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியினை துபை அவ்காஃப் வளாக அரங்கில் ஏற்பாடு செய்தனர்.


இறையருளால் 10.02.2012 அன்று துபை அல்கூஸில் உள்ள அல் மனார் இஸ்லாமிய மையத்திலும் 17.02.2012 அன்று துபை அவ்காஃப் (இஸ்லாமியத்துறை) அரங்கிலும் ஜாக் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கோவை அய்யூப் அவர்களின் பயான் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர் கோவை அய்யூப் அவர்கள் 'இஸ்லாம் அன்றும் இன்றும்' என்ற தலைப்பிலும் மற்றும் 'அந்த நாள் வரும் முன்' என்ற தலைப்பிலும் மிக அருமையான உரை நிகழ்த்தினார்கள்.


நிகழ்ச்சியினை சமுதாய புரவலர் கீழக்கரை ரஃபி அஹ்மது, தமுமுக அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி மற்றும் தமுமுக அபுதாபி செயலாளர் பொறியாளர்.கீழை இர்பான், இ த ஜ கீழை ஜமீல் மற்றும் கமால், அதிரை ஜமால் உள்ளிட்டவர்களின் ஒருங்கிணைப்பில் மிக சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சிக்கு அமீரகத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வந்தனர். ஆண்களுக்கு சமமாக பெண்களும் கலந்து கொண்டனர். அரங்கம் நிரம்பி வழிந்தது.

இஸ்லாமிய அழைப்பாளர் பொதக்குடி ஜலால் அவர்களும் தமுமுகவின் அமீரக தலைமை நிர்வாகி பொறியாளர்.ஜெய்லானி அவர்களும் தமுமுக அபுதாபி தலைவர் பொதக்குடி தாஜுதீன் அவர்களும் மற்றும் சமுதாய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியினை ஜாக், தமுமுக, மமக, இதஜ மற்றும் இயக்கம் சாராத தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிக சிறப்பாக நடத்தினர். 

தமுமுகவின் நிர்வாகிகளான முகவை. இஸ்மாயில் இந்நிகழ்ச்சியின் அழைப்பிதழை வடிவமைத்தார். படம்  கீழை அஹ்மது.

அல்ஹம்துலில்லாஹ்!

Tuesday, February 7, 2012

10.02.2012 அன்று துபை அல் மனார் சென்டரில் கோவை அய்யூப் சிறப்புச் சொற்பொழிவு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


10.02.2012 அன்று துபை அல் மனார் சென்டரில் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் அன்றும் - இன்றும் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு !